Friday, August 28, 2015

மனித உற/உணர் வுகள் - ஒரு நொடி பிரதிபலிப்பு

திர்க்கக்கர வாமன மூர்த்தி கோவிலில் ஓணம் மிக சிறப்பு.  அத்தம் ( ஆவணி ஓன்று )  தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாட்டம். மகாபலி மன்னன் வருகைக்காக எங்கும் பூக்களம் ( பூக்கள் கொண்ட  கோலம்) தினமும் ஒண சத்யா (விருந்து சாப்பாடு  ) பாயசத்துடன். பள்ளிகள் கல்லூரிகள் எல்லாம் பத்து நாட்டகள் விடுமுறை. ஊட்டு பிரையில் ( சாப்பிடும் இடம் ) 11.30 மணிக்கே கூட்டம் கூட தொடங்கி விடும். எங்கும் குழந்தைகள் இளைஞர்கள் முதியோர்கள் கலகல என வந்து சாப்பிட்டு விட்டு போவார்கள் .

நான் வரிசயில் நிற்கும் போது அங்கே வரும் குழந்தைகளை ( கை குழந்தை முதல் 12 அல்லது 13 வயது வரை ) நோக்குவது உண்டு. அவர்களை காணும் போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி. அவர்களோடு நான் இருப்பது போல எனக்கும் சந்தோசம் தொத்தி கொள்ளும். என் கண்ணிலிருந்து மறையும் வரை பார்ப்பேன். அவர்களது சின்ன சின்ன உணர்வுகள் எனக்குள்ளும் வந்து விடும்.

ஒரு பெண்  கை குழந்தை ஒன்றோடு வந்தாள். அவளது தாயும் மற்றும் குடும்பத்தினர் வரிசையில் நின்றனர். இங்கே ஒரு பழக்கம் உண்டு அதாவது கை குழந்தையோடு வரும் தாயையும் வயதான அம்மையையும் அப்பனையையும் நிற்க விடாமல் உடனே உள்ளே அழைத்து உட்கார சொல்வர். அப்படி உட்கார்ந்த பெண்ணை ஒரு கணம் நோக்கிவிட்டு என் பார்வை அந்த குழந்தையிடம் சென்றது. 

அது ஒரு ஆண் குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதம் இருக்கும். கால்களில் சாக்ஸ் மற்றும் இடுப்பில் டயாபர் அதன் மேல் கால் சட்டை. கொஞ்சம் கரு நிறம் கண்களில் மை மெலிந்த உடல் வாகுடன் இருந்தான். மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் அமைதியாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு நொடி பொழுதில் எங்களுக்குள்  கண் தொடர்பு ஏற்பட்டது. நான் ஒன்றும் அறியா ஒரு சிறு குழந்தையை அங்கு பார்க்கவில்லை ஒரு அமைதியான ஆன்மாவை பார்த்தேன். 

பின் அவன் தன்  இருகைகளையும் பிணைத்து பெருவிரல்களை நிதானமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். இவ்வளவு அமைதியாய்  சிந்தனையில் அவன் ஏன் இருந்தான் தெரியவில்லை. நானும் சிந்தித்து கொண்டிருந்தேன். அவர்களை  உட்கார வைத்தவர் உடனே போய் ஒரு தட்டில் சுட சுட  சத்யா கொண்டு வந்து  அருகில் உள்ள ஒரு நாற்காலியில் வைத்து விட்டு போனார். 

அவள் ஒன்றிரண்டு பருக்கைகளை கையில் எடுத்து ஒரு துளி சாம்பாரோடு பிசுக்கி சிந்தனயில் இருந்த மகன் வாயில்  வைத்தாள். சட்டென்று ஒரு நொடியில்  சுயநினைவுக்கு வந்தவன் முகம் சுளித்தான் யாரடா இது என்பது போல. சுளித்து கொண்டிருக்கும் போதே அவன் தாயை நிமிர்ந்து பார்த்தான் அந்த ஒரு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது. கொள்ளை அழகாக இருந்தது பார்ப்பதற்கு. அட நீதானா என்பது  போல. இருவர் முகத்திலும் புன்சிரிப்பு. 

அப்போது எனக்கு மனதில் தோன்றியது......
குழந்தைக்கும் தாய்க்கும் நடுவில் இருக்கும் இந்த ஆன்மாவின் தொடர்பு மிகவும் புனிதமானது. இது  பெண்களாய் ஜனித்தவர்களுக்கு  கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.




  


படம் : உபயம் - கூகிள் ( சொல்லப்பட்ட சம்பவத்திற்கு  பொருத்தமானது) 

No comments:

Post a Comment