Sunday, February 7, 2010

ஆசை பேய்(கள்)

(The same thoughts that every one of you have - Just a reminder)

உங்கள்ள பேய்கள நம்புறவுங்க எத்தனை பேருங்க இருக்கீங்க ?? இந்த காலத்துல நிறைய பேர் பேய்கள நம்பறதில்லை... வெகு சிலபேருக்கே அதுல நம்பிக்கை இருக்கு.. விஞ்ஞான வளர்ச்சி அப்படி. ஆனா உண்மை என்ன தெரியுமா ?? பேய்கள் இருக்கு... இருக்கும்.. இருந்துகிட்டே இருக்கும். நீங்க நம்பி தான் ஆகணும். நம்ம கூடவே அதுவும் வாழ்ந்துகிட்டிருக்கு. மனிதர்கள் இருக்கிற வரை பேய்களும் இருக்கும்.

இந்த பேய் ஆசை
என்ற பேர்ல மனிதர்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கு... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல பேய்கள் குடியிருக்கு... இந்த பண்டோரா பாக்ஸ் கத தெரிஞ்சவுங்களுக்கு இது புரியும். ஆசை மட்டுமே பல வேஷங்கள் போட்டு மனுஷன கொடுமை படுத்திகிட்டிருக்கு. சாப்பாடு இல்லாதவன் சாப்பாட்டுக்கு ஆசை படலாம். உறங்க ஒரு இடமும் இல்லாதவன் இடத்துக்கு ஆசை படலாம். இது மாதிரியே உடுக்க உடை, கற்க கல்வி, அன்புக்கு ஒரு குடும்பம், படித்த படிப்பிற்கு ஒரு வேலை...இவ்வளவு தானேங்க ஒருத்தனுக்கு வேணும். ஆனா அப்படியா ஆசபடுறாங்க...

என்ன சார்/மேடம் கொடும இது..?? மேல சொன்ன எல்லாமே இருந்தும் இந்த உலகத்துல நிறைய பேரை ஆசை பேய்கள் கூடி அடிச்சுகிட்டிருக்கு. யாராவது கவனிச்சிங்களா?? ஆடம்பரமான வாழ்கை, பெரிய பதவி, அரண்மனை போன்ற வீடு, விலை உயர்ந்த உடைகள்... கட்டின மனைவிய விட (மகள் வயதில்) அழகான பெண்... பெற்ற பிள்ளைகளை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள். தன்னால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை குழந்தைகள் மேல் ஏற்றுகிறார்கள். குழந்தைகளை பாரம் சுமக்கும் கழுதை ஆக்கி விடுகிறார்கள்.

இதுக்கு
காரணம் பழைய காலத்திலிருந்தே உலவி வருகிற மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் பேய்கள். வயசு வித்யாசம் பார்க்காம இந்த பேய்கள் மனிதர்களுக்குள் குடியேறி விடுகிறது. இந்த பேய்களோட கூட அவங்க சகோதர சகோதரிகளும் ( போட்டி, பொறமை, கர்வம், அடுத்தார் மேல்பழி ) சேர்ந்தே குடி எறிடுராங்க. இதனால பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போச்சு. சந்தோஷமான வாழ்கைண்ணா என்னண்ணே யாருக்கும் தெரியல. தெரிஞ்சுக்கவும் நிறைய பேர் விருப்பப்பாடல. முழி பிதுங்கி.. ஓட்ட முடியாத வண்டியா வாழ்கைய நினைச்சு ஒட்டிகிட்டிருக்காங்க.

உங்கள்ளுக்குள் இருக்கிற இந்த பேய்கள ஒட்டணுமா ?? வேண்டாமா?? நீங்களே சொல்லுங்க.. இந்த பேய்கள வரம் வாங்கிவிட்டு வந்தவை.. ஓட்ட முடியாது ஆனா கட்டுபடுத்த முடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ). ஒவ்வொரு மனிதனும் ஒரு பண்டோரா பாக்ஸ் மாதிரி தான். பெட்டியை அடைத்து வைத்திருக்கிற வரை அவனுக்கு நல்லது. பெட்டியை திறந்து விட்டால் அதிலுள்ள பேய்கள் வெளியே வந்து அவனது வாழ்கையை சிதைத்து விடும்.

தயவு செய்து உங்களிடம்
இருக்கும் பேய்களை தைரியமாக நீங்களே அடக்கி வையுங்கள் வெளியே உலவ விட்டு விடாதீர்கள் !!!

நன்றி.

பின் குறிப்பு.
பண்டோரா பாக்ஸ் பற்றி தெரியாதவுங்க உடனே google பார்த்து தெரிஞ்சிக்குங்க.