இயந்திரம் போல் உழைதுண்டுறங்கி
எதற்காக யாருக்காக வாழ்கிறோம் ?
பணம் பதவி கல்வி குடும்பம்
எதை தேடி ஓடிகொண்டிருக்கிறோம்?
நாம் யார் ? நமக்கென வேண்டும்?
ஜென்மங்கள் ஒன்றோ எண்பத்தி நான்கு லக்ஷமோ ?!
எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகப்போகிறோம்?
அனாதைகளாக பிறந்து அனாதைகளாகவே இறக்கிறோம்
என்ன நேடினோம்.. எதை கொண்டு போவோம்
நம்மை பெற்றவர்களும் நமக்கு சொந்தமில்லை
நாம் பெற்றவர்களும் நமக்காக பிறக்கவில்லை
இடையில் வந்தவர்கள் மட்டும் ?!
யாரும் யாருக்கும் உறவில்லை
உறவென்றாலே ஒரு வகை அடிமைத்தனம்
படிப்படியாக வரிசை படுத்தி வைக்கபட்டவை
நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்
நம்முடைய மனதோடும் சிந்தனைகளோடும்
ரத்தமும் சதையும் கொண்டு செய்யப்பட்ட
உடல் சட்டைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறோம்
புலி தோல் போர்த்திய பசுவாகவோ
பசு தோல் போர்த்திய புலியாகவோ !!
ஏன் நாம் இரக்க குணம் உள்ளவர்களாக
மனித நேயம் உள்ளவர்களாக...
போதும் என்ற மனதோடு வாழக்கூடாது ?
தான் நம்முடைய படிப்பு பணம் பதவி எல்லாம்
சட்டை எப்படி இருந்தாலும் நாம் சமமே.....
இந்த அழகிய பூமி, நீர், நிலம், காற்று, ஆகாயம்
எல்லாவர்க்கும் பொதுவானது...
இந்த நொடி மட்டுமே நமக்கு சொந்தம்
அடுத்த நொடி நமது கையில் இல்லை
முதலில் உங்களை நேசியுங்கள்
பின் மற்றவர்களையும் நேசியுங்கள்
எதையோ சொல்ல வந்து எதையோ
சொல்லிவிட்டு போகிறேன்..........
எதைச்சொல்ல வந்தீர்களோ ?
ReplyDeleteஆனால் நேசிக்க சொன்னது சரியே...
நன்றி சசி கலா எனது வலைபதிவுக்கு வந்து கருது தெரிவித்தமைக்கு !! _/\_
Delete