Thursday, May 14, 2015

மேக ஓவியம்


விரித்த  ஒற்றை வான வரை திரையில்....
நித்தம் இரவு பகலாக
பல்லாயிரம் ஓவியங்கள் ...
மேக வர்ணம் பூசி
காற்று தூரிகை கொண்டு
கறுப்பு  வர்ணத்தையும்
வெள்ளை வர்ணத்தையும்
குழைத்து அழகாக தீட்டுகிறான்.....

அந்த மாய ஓவியன் யார் ??
ஓன்று மட்டும் தெளிவாக தெரியுது
வெயிலடிக்கும் போது அவன்
அயர்ந்து ஓய்வெடுக்கிறான்....
மழை பெய்யும் போது
சுறுசுறுப்பாக ஓவியங்களை
தீட்டி தள்ளுகிறான்....





2 comments: