Sunday, February 7, 2010

ஆசை பேய்(கள்)

(The same thoughts that every one of you have - Just a reminder)

உங்கள்ள பேய்கள நம்புறவுங்க எத்தனை பேருங்க இருக்கீங்க ?? இந்த காலத்துல நிறைய பேர் பேய்கள நம்பறதில்லை... வெகு சிலபேருக்கே அதுல நம்பிக்கை இருக்கு.. விஞ்ஞான வளர்ச்சி அப்படி. ஆனா உண்மை என்ன தெரியுமா ?? பேய்கள் இருக்கு... இருக்கும்.. இருந்துகிட்டே இருக்கும். நீங்க நம்பி தான் ஆகணும். நம்ம கூடவே அதுவும் வாழ்ந்துகிட்டிருக்கு. மனிதர்கள் இருக்கிற வரை பேய்களும் இருக்கும்.

இந்த பேய் ஆசை
என்ற பேர்ல மனிதர்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கு... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல பேய்கள் குடியிருக்கு... இந்த பண்டோரா பாக்ஸ் கத தெரிஞ்சவுங்களுக்கு இது புரியும். ஆசை மட்டுமே பல வேஷங்கள் போட்டு மனுஷன கொடுமை படுத்திகிட்டிருக்கு. சாப்பாடு இல்லாதவன் சாப்பாட்டுக்கு ஆசை படலாம். உறங்க ஒரு இடமும் இல்லாதவன் இடத்துக்கு ஆசை படலாம். இது மாதிரியே உடுக்க உடை, கற்க கல்வி, அன்புக்கு ஒரு குடும்பம், படித்த படிப்பிற்கு ஒரு வேலை...இவ்வளவு தானேங்க ஒருத்தனுக்கு வேணும். ஆனா அப்படியா ஆசபடுறாங்க...

என்ன சார்/மேடம் கொடும இது..?? மேல சொன்ன எல்லாமே இருந்தும் இந்த உலகத்துல நிறைய பேரை ஆசை பேய்கள் கூடி அடிச்சுகிட்டிருக்கு. யாராவது கவனிச்சிங்களா?? ஆடம்பரமான வாழ்கை, பெரிய பதவி, அரண்மனை போன்ற வீடு, விலை உயர்ந்த உடைகள்... கட்டின மனைவிய விட (மகள் வயதில்) அழகான பெண்... பெற்ற பிள்ளைகளை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள். தன்னால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை குழந்தைகள் மேல் ஏற்றுகிறார்கள். குழந்தைகளை பாரம் சுமக்கும் கழுதை ஆக்கி விடுகிறார்கள்.

இதுக்கு
காரணம் பழைய காலத்திலிருந்தே உலவி வருகிற மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் பேய்கள். வயசு வித்யாசம் பார்க்காம இந்த பேய்கள் மனிதர்களுக்குள் குடியேறி விடுகிறது. இந்த பேய்களோட கூட அவங்க சகோதர சகோதரிகளும் ( போட்டி, பொறமை, கர்வம், அடுத்தார் மேல்பழி ) சேர்ந்தே குடி எறிடுராங்க. இதனால பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போச்சு. சந்தோஷமான வாழ்கைண்ணா என்னண்ணே யாருக்கும் தெரியல. தெரிஞ்சுக்கவும் நிறைய பேர் விருப்பப்பாடல. முழி பிதுங்கி.. ஓட்ட முடியாத வண்டியா வாழ்கைய நினைச்சு ஒட்டிகிட்டிருக்காங்க.

உங்கள்ளுக்குள் இருக்கிற இந்த பேய்கள ஒட்டணுமா ?? வேண்டாமா?? நீங்களே சொல்லுங்க.. இந்த பேய்கள வரம் வாங்கிவிட்டு வந்தவை.. ஓட்ட முடியாது ஆனா கட்டுபடுத்த முடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ). ஒவ்வொரு மனிதனும் ஒரு பண்டோரா பாக்ஸ் மாதிரி தான். பெட்டியை அடைத்து வைத்திருக்கிற வரை அவனுக்கு நல்லது. பெட்டியை திறந்து விட்டால் அதிலுள்ள பேய்கள் வெளியே வந்து அவனது வாழ்கையை சிதைத்து விடும்.

தயவு செய்து உங்களிடம்
இருக்கும் பேய்களை தைரியமாக நீங்களே அடக்கி வையுங்கள் வெளியே உலவ விட்டு விடாதீர்கள் !!!

நன்றி.

பின் குறிப்பு.
பண்டோரா பாக்ஸ் பற்றி தெரியாதவுங்க உடனே google பார்த்து தெரிஞ்சிக்குங்க.

27 comments:

  1. பேயோட்டும் சாமியாரிணி மைதிலீஸ்வரி: சூப்பர். சரியா ஆணி அடிச்ச மாதிரி, நச்சுனு சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  2. THE TEMPLATE IS VERY GOOD KANNAMMAA..
    as a designer i tell you..
    it gives the feeling of being in a beautifully constructed hill house..
    font colour-maybe u can change it into a little bolder one ..
    love ..love ..love the place i am..

    ReplyDelete
  3. andha right side block-ku-kulla ezhuththu poekaadha maadhiri paaththukkoe..
    that looks a little odd..
    -----------------------------------------------
    nalla pakirvu..
    what we think u have filled them in words..
    content and contour are good..
    -----------------------------------------------
    chummaa
    pandora box-adhu idhumnnu poettuttu edhukku irukkaan namma GOOGLE MACHCHAAN-nu solra soeliya vidu..
    neeyae angittu kuduththirukkalaam..
    -----------------------------------------------
    moththathil nalla vaarththaikal..
    romba cool-laa flowy-yaa sollittu poitta..
    it showed ur cool-cat attitudes on life but with a SHARP-PAWING..
    -----------------------------------------------
    EXPECTING MOREDEE..!!
    FROM U..!!
    KEEP WRITING ..
    WE R THERE ALWAYS FOR THE CUP OF COMPLAN THAT U NEED KUTTI..
    ...............................................
    IVE put it in blocks only totally segregated from the others..
    thittaadha dee..!!

    ReplyDelete
  4. aeh..
    my words too entered into the right
    block..
    ok..lets be careful the next time..

    ReplyDelete
  5. i think the size of the coment boxes
    shud be cropped at the right..
    is there any option for it..??
    if so do it ..

    ReplyDelete
  6. I f there are no options for correcting the size of the columns nee ENTER thatti thatti adidaa..

    ReplyDelete
  7. //ஓட்ட முடியாது ஆனா கட்டுபடுத்த முடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ).//

    அருமையா சொன்னீங்க மைதிலி

    ReplyDelete
  8. //உங்கள்ளுக்குள் இருக்கிற இந்த பேய்கள ஒட்டணுமா ?? வேண்டாமா?? நீங்களே சொல்லுங்க.. இந்த பேய்கள வரம் வாங்கிவிட்டு வந்தவை.. ஓட்ட முடியாது ஆனா கட்டுபடுத்த முடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ). //

    உண்மை தான் மைதிலி... இவை உள்ளுக்குள்ளேயே இருப்பது எல்லோருக்கும் நல்லது... அதுவும் நீங்க சொன்ன மாதிரி ”ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி”... யப்பா என்னா உவமை!!!??

    ReplyDelete
  9. நல்லாயிருக்குங்க உங்க பேயாட்டம்....

    ReplyDelete
  10. ஆசை ஒ.கே!! பேராசை மனிதனுக்குள் புகும்போது தான் , நீங்க லிஸ்ட் போட்ட மாதிரி, பொறாமை, பழி சுமத்துதல் எல்லாவற்றையும் கூடவே அழைச்சிட்டு வந்துடுது. முடிந்த அளவு பேயை விரட்டிவிடுறோமுங்க!! அது நம்மளை விட்டு போய்விட்டாலும் சந்தோசம் தான்.

    ReplyDelete
  11. enna solla vandha..??
    ivangalukku ellaam
    aen badhil sollikkittunnu
    ninaichchu back adichchittiyaa..??
    ---------------------------
    give ur comments..
    individually..
    that will haelp for a
    HEALTHY INTERACTION..
    THANI THANIYAA THANK PANNU MOAL..
    ----------------------------
    NEE VALARAAN KAANAAN
    VALARA SANDHOESHAM MOAL..
    ADI POLLI-YAAI IRUNDHU..
    iniyum moal ezhudhanum..
    jangal undu allae..??
    kalakki kalai..!!
    enda snaeka poorva
    ABHINANDHANANGAL
    ENGALDA MOALUKKU..!!

    ReplyDelete
  12. Mythili...good one...and thanks for reminding us to control our ghosts..GH

    ReplyDelete
  13. Special Thanks to Chitra for helping me reorganize my blog.

    ReplyDelete
  14. Thanks yathavan for encouraging this toddler (in writing).

    ReplyDelete
  15. Thanks Thenammai for visiting my blog and placing your comments.

    ReplyDelete
  16. Nantri R.Gopi. Peya appadithaan Chottaanikarayila adichchu vaippaanga.

    ReplyDelete
  17. Sanghkavi... Peyaattaththil kalanthu kondamaikku mikka nantri.

    ReplyDelete
  18. Thanks Suffix for your valuable time, comment and involvement.

    ReplyDelete
  19. Oh Geo, thanks friend for reading this article.

    ReplyDelete
  20. கரெக்டா சொன்னீங்க...

    ReplyDelete
  21. இருக்குற பேய் எல்லாம் ஓட்டிட்டா அப்புறம் இன்னேரு பேய் வந்து உக்காந்து கொள்ளும். ஆதலால் நிறைவேறக் கூடிய அளவான, ஆபத்தில்லா பேய்களை நம்முடன் வைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. பேய்கள் இல்லாமல் இருப்பது அபத்தம். அது புத்தர் ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் எனபது போலத்தான். நாம் அத்தனைக்கும் ஆசைப்படாவிட்டாலும், கொஞ்ச ஆசை வைத்துக் கொண்டால் நலம். நன்றி.

    ReplyDelete
  22. //மனிதர்கள் இருக்கிற வரை பேய்களும் இருக்கும்.//

    இது சரியா வார்த்தை, மைதிலி டெம்ப்லேட் ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete
  23. என் பதிவுக்கு வருகை தந்தமைக்கும்,பாராட்டுதலுக்கும் நன்றி ஜலீலா. உங்களைபற்றி சித்ரா மூலமாக கேள்விபட்டிருக்கிறேன் .. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  24. பித்தன், நீங்க சொல்லறது வாஸ்தவம் தான். நன்றி பித்தன்..

    ReplyDelete
  25. அருமையா சொல்லிருக்கீங்க.. இனிமேல் பேயை பார்த்து பயப்படமாட்டோம் .

    நல்ல பதிவு மைதிலி மேடம்.

    ReplyDelete
  26. oru techie ivalavu azhahaha yosipathu, eluthuvathu mihavum nandraha irukirathu..peyarida virumbatha oru rasihai..

    ReplyDelete